Pages

Friday 3 August 2012

மட்டன் பிரியாணி



 
  • ஊற வைக்க :
  • மட்டன் - அரை கிலோ
  • தயிர் - ஒரு கப்
  • மிளகாய் பொடி - அரை தேக்கரண்டி
  • மல்லிப் பொடி - அரை தேக்கரண்டி
  • மஞ்சள் பொடி - சிறிது
  • கரம் மசாலா - அரை தேக்கரண்டி
  • இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
  • புதினா, மல்லி தழை - ஒரு கைப்பிடி
  • வாசனை பொருட்கள் :
  • பட்டை - 3
  • கிராம்பு - 4
  • ஏலக்காய் - ஒன்று
  • பிரியாணி இலை - 3
  • முந்திரி - 5
  • வதக்க :
  • பாஸ்மதி அரிசி - 2 கப்
  • பெரிய வெங்காயம் - 2
  • பச்சை மிளகாய் - 5
  • இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
  • தக்காளி - 2
  • புதினா மல்லி தழை - ஒரு கைப்பிடி
  • மல்லி, மிளகாய், மஞ்சள், கரம் பொடி - தலா அரை தேக்கரண்டி
  • நெய் மற்றும் எண்ணெய் - தாளிக்க
  • உப்பு - தேவைக்கு


,.
முதலில் தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும். தக்காளி, வெங்காயம், மல்லி, புதினா மற்றும் பச்சை மிளகாயை தேவையான அளவில் நறுக்கிக் கொள்ளவும். அரிசியை 20 நிமிடம் ஊற வைக்கவும்.
ஊற வைக்க தேவையான பொருட்களை கறியுடன் நன்கு கலந்து அரை மணி நேரம் மேரினேட் செய்யவும்.
பின் குக்கரில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஒரு பட்டை, இரண்டு கிராம்புகளை போட்டு, சிறிது வெங்காயம் சேர்த்து வதக்கி கறியை போட்டு 5 விசில்கள் வந்ததும் இறக்கவும்.
பின் ஒரு கடாயில், நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வாசனை பொருட்களை சேர்த்து பொரிந்ததும், பச்சை மிளகாய் மற்றும் சிறிது புதினா, மல்லி தழைகளை போட்டு வதக்கவும்.
வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசம் போகும்படி வதக்கவும்.
நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து நன்கு குழையும்படி வதக்கி பொடி வகைகளை சேர்க்கவும்.
ஒன்று சேர நன்கு வதங்கியதும், குக்கரில் இருக்கும் கறியை சேர்த்து 5 நிமிடம் அடுப்பில் வைக்கவும்.
பின் எலக்ட்ரிக் அடுப்பில் தேவையான நீர் சேர்த்து வைக்கவும். பிரஷர் குக்கரில் வைப்பவர்கள் கறியுடன் தாளித்து அரிசி சேர்த்து தேவையான நீருடன் வைக்கவும்.
அரை மணி நேரத்தில் மணமான பிரியாணி ரெடி
பத்து நிமிடம் கழித்து சிறிது நெய் சேர்த்து ஒன்று சேர பிரட்டி பரிமாறவும்.

0 comments:

Post a Comment