Pages

Friday 7 September 2012

கடலைப்பருப்பு குருமா



 
  • கடலைப்பருப்பு - 3 தேக்கரண்டி
  • தேங்காய் துண்டுகள் - கால் கப்
  • பச்சை மிளகாய் - 3 - 4
  • கறிவேப்பிலை
  • வெங்காயம் - ஒன்று
  • தக்காளி - ஒன்று
  • எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
  • கடுகு, சீரகம், உளுந்து, கடலைப்பருப்பு - தாளிக்க
  • உப்பு - தேவையான அளவு
  • மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி


கடலைப்பருப்பை அரை தேக்கரண்டி எண்ணெய் விட்டு வறுத்து எடுக்கவும். இத்துடன் தேங்காய், பச்சை மிளகாய் சேர்த்து அரைக்கவும்.
தேவைக்கு நீர் விட்டு நைசாக அரைத்து எடுக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கவும். இதில் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
இதில் அரைத்த விழுது சேர்த்து 2 - 3 கப் வரை நீர் விட்டு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
மசாலா வாசம் போய் குருமா பதம் வந்ததும் இறக்கவும். சுவையான கடலைப்பருப்பு குருமா தயார். தோசை, இட்லி, சப்பாத்திக்கு சுலபமான சைட் டிஷ்.

நீர் நிறைய சேர்க்க வேண்டும். கடலைப்பருப்பு அரைத்து சேர்ப்பதால் உடனே கெட்டியாகி அடிப்பிடிக்கும். அடிக்கடி கிளறிவிட வேண்டும். மசால் வாசம் போகும் முன் கெட்டியானால் இடையில் சூடான நீர் சேர்க்கவும்.

0 comments:

Post a Comment