Pages

Monday 30 July 2012

சிந்தி சிக்கன் பிரியாணி



 
  • பாசுமதி அரிசி - 2 கப்
  • சிக்கன் எலும்போடு - 800 கிராம்
  • எலும்பில்லாத சிக்கன் கொத்து கறி - அரை கப்
  • உருளைக்கிழங்கு - ஒன்று
  • தயிர் - ஒரு கப்
  • இஞ்சி பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி
  • மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
  • கரம் மசாலா - ஒரு தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
  • புதினா இலை - 2 மேசைக்கரண்டி அளவு
  • பச்சை மிளகாய் - 4
  • வெங்காயம் - 3
  • குங்குமப்பூ - சிறிது
  • பால் - 2 மேசைக்கரண்டி
  • தாளிக்க:
  • பட்டை - சிறிது
  • லவங்கம் - 5
  • கறுப்பு ஏலக்காய் - 2
  • பச்சை ஏலக்காய் - 2
  • சீரகம் - ஒரு தேக்கரண்டி
  • எண்ணெய் + நெய் - 4 மேசைக்கரண்டி


சிக்கன் துண்டுகளில் தூள் வகைகள், சிறிது உப்பு, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பிரட்டவும்.
அரை மணி நேரம் விட்டு தயிர் சேர்த்து மீண்டும் பிரட்டி அரை மணி நேரம் ஊற விடவும். அரிசியை கழுவி ஊற வைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் நெய் விட்டு காய்ந்ததும் சீரகம், பட்டை, லவங்கம், இருவகை ஏலக்காய் தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
இதில் கொத்திய எலும்பில்லாத கறியை சேர்த்து பிரட்டவும்.
கறி கலர் மாறும் போது உருளையை சேர்த்து வதக்கவும்.
உருளை சற்று வதங்கியதும் சிக்கன் கலவையை சேர்த்து கலந்து மூடி வேக விடவும்.
சிக்கன் வெந்ததும் அரிசி மற்றும் புதினா இலை சேர்த்து பிரட்டி விடவும்.
2 நிமிடம் பிரட்டியதும் உப்பு மற்றும் 3 1/2 கப் நீர் விட்டு கொதி வந்ததும் பாலில் ஊறிய குங்குமப்பூ சேர்த்து சிறுந்தீயில் போட்டு மூடி வேக விடவும்.
சுவையான சிந்தி சிக்கன் பிரியாணி தயார்.

0 comments:

Post a Comment