Pages

Saturday 30 June 2012

கவிதை


மழை........!
பூமிப் பெண்ணிற்கு,
வானம் அனுப்பும் காதல் கவிதை! - மழை




அப்பா.....
அன்பை வெளிக்காட்டாவிட்டாலும் - உலகிலேயே,
ஆழமான நேசம் கொண்ட ஒரு இதயம்! - அப்பா


துடிக்கிறேன் நான்
என் இதயம் தொலைத்த குற்றத்துக்காக எனை கைது செய்வாயா நீ...
உன் இதயக் கூட்டில் தனிமையில் சிறை இருக்க துடிக்கும் பறவையாய் நான் !!


விந்தை காதல்
உன் ஒரு நொடி பார்வைக்காக தவமிருந்த என் கண்கள்
என் மேல் உன் பார்வை பட்டதும் ஒளிந்து கொண்டதேனோ??
உன் மேல் உள்ள காதலை சொல்ல துடித்த என் இதழ்கள்
என் மேல் உள்ள உன் காதலை சொன்னதும் மவுனித்ததேனோ??


0 comments:

Post a Comment