- பருப்பு - கால் கப்
 - தக்காளி (அரைக்க) - 2
 - தக்காளி - ஒன்று
 - எலுமிச்சை - ஒன்று
 - பூண்டு - 5 பல்
 - ரசப் பொடி
 - கொத்தமல்லி தழை - சிறிதளவு
 - உப்பு - தேவைக்கு
 - தாளிக்க:
 - நெய் - சிறிது
 - கடுகு - கால் தேக்கரண்டி
 - வெந்தயம் - கால் தேக்கரண்டி
 - காய்ந்த மிளகாய் - 2
 - கறிவேப்பிலை - சிறிதளவு
 
தேவையானப் பொருட்களை தயாராக வைத்துக் கொள்ளவும். இரண்டு தக்காளிகளை அரைத்துக் கொள்ளவும். ஒரு தக்காளியை நறுக்கி வைக்கவும். பருப்பை குழைய வேக வைத்து தண்ணீர் சேர்த்து கடைந்து கொள்ளவும். 
 | |
ஒரு கடாயில் சிறிதளவு நெய் விட்டு கடுகு, வெந்தயம் போட்டு பொரிந்ததும் இரண்டாக கிள்ளிய காய்ந்த மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். 
 | |
இதில் தக்காளி விழுது சேர்த்து அதனுடன் நறுக்கிய தக்காளி சேர்க்கவும். 
 | |
இதில் பருப்பு தண்ணீர் ஊற்றவும். இப்போது தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும். 
 | |
ரசப்பொடி 2 தேக்கரண்டி சேர்க்கவும். (ரசப்பொடியில் ஒரு கப் சீரகம், அரை கப் மிளகு மற்றும் 5 அல்லது 6 காய்ந்த மிளகாய் சேர்த்து அரைத்து உள்ளேன்.) 
 | |
ரசம் ஒரு கொதி வந்ததும் பூண்டை தோலுடன் தட்டி ரசத்தில் சேர்த்து அடுப்பை அணைத்து விடவும். 
 | |
ஒரு பாத்திரத்தில் எலுமிச்சம் பழத்தை பிழிந்து கொள்ளவும். அதனுடன் சிறிது கறிவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் ஒரு துளி நெய் விட்டு தயாராக வைக்கவும். 
 | |
இதில் ரசத்தை ஊற்றவும். 
 | |
சுவையான தக்காளி-எலுமிச்சை ரசம் தயார். 
 | 
இந்த குறிப்பு தொலைக்காட்சியில் பார்த்து கற்று கொண்டது. எங்கள் வீட்டில் அடிக்கடி செய்யும் ரசம் இது. கொத்தமல்லி காம்பு தான் ரசத்துக்கு வாசம் தரும். அதனால் வேர்ப்பகுதியை மட்டும் நறுக்கிவிட்டு தழையுடன் காம்பையும் போடலாம்.
0 comments:
Post a Comment