Pages

Monday 16 July 2012

மட்டர் பனீர்



 
  • பனீர் - ஒரு பாக்கெட்
  • பச்சை பட்டாணி - 150 கிராம்
  • தக்காளி - 3
  • வெங்காயம் - 2
  • வெண்ணெய் - 2 தேக்கரண்டி
  • கரம் மசாலா - ஒரு தேக்கரண்டி
  • தனியா தூள் - ஒரு தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
  • மிளகாய் தூள் - 3 தேக்கரண்டி
  • முந்திரி - 10
  • உப்பு - தேவையான அளவு


தக்காளி, வெங்காயம் இரண்டையும் தனித்தனியாக அரைத்து விழுதாக்கிக் கொள்ளவும். பட்டாணியை வேக வைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். முந்திரியை விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும் மற்றும் தேவையான அனைத்து பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பனீரை 10 நிமிடம் ஊற வைக்கவும்.
முதலில் பேனில் வெண்ணெயை போட்டு சூடானதும் வெங்காய விழுதைப் போட்டு நன்கு வதக்கவும்.
பொன்னிறமாக வதங்கிய பின் தக்காளி விழுதை போட்டு நன்கு வதக்கவும்.
அது நன்கு வதங்கியவுடன் முந்திரி பேஸ்டை போட்டு கிளறவும்.
பின் வேக வைத்த பட்டாணியை போட்டு நன்கு கிளறி விடவும்.
5 நிமிடம் கழித்து மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, கரம் மசாலா, தனியா தூள் சேர்த்து நன்கு கிளறவும்.
மசாலா கொதித்து வந்தவுடன் பனீரை போட்டு ஒரு கிளறு கிளறவும்.
பின் அந்த பேனை மூடி ஒரு பத்து நிமிடம் சிம்மில் வைக்கவும்.
இப்பொழுது சூடான சுவையான பனீர் மசாலா ரெடி. இது நாண் மற்றும் சப்பாத்திக்கு ஏற்ற சுவையான மசாலா.

0 comments:

Post a Comment